Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Saturday, October 23, 2004

Halloween கொலு

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு நவராத்திரிக்கும் Halloweenக்கும் உள்ள ஒற்றுமைகள் நன்றாகவே புலப்படும். Halloweenன் போது நவராத்திரி போலவே குழந்தைகள் வீடு வீடாகச்சென்று சுண்டலுக்குப் பதிலாக இனிப்புகள் கேட்கும். நாம் கொலு வைத்து அலங்கரிப்பதுபோல் அமெரிக்கர்கள் தமது வீட்டை பயமுறுத்தும் பொருட்களால் அலங்கரிப்பார்கள். Halloweenனையும் நவராத்திரியையும் கலந்து ஒரு கொலு வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததில்.....



(இணையத்தில் யார் வீட்டு கொலுவையோ சுட்டு இப்படி கொடுமைப்படுத்தியதற்கு கொலுவின் சொந்தக்காரர் என்னை மன்னிக்கவும்)


Wednesday, October 06, 2004

மலரும் நினைவுகள் - 3 (உயிரோடு கலந்த பாடல்கள்)

ஒரு அமைதியான இரவு. நல்ல சுவையான இரவு உணவு சாப்பிட்டபின் படுக்கையில் படுத்தவாறு செவிக்குணவாக ஆல் இண்டியா ரேடியோ.. தேன்கிண்ணத்தில் சுரந்துவரும் 'என் வானிலே.. ஒரே வெண்ணிலா'.. உன் வானிலும் சந்தோஷப்பறவை சிறகடித்துப் பறக்கவைக்கிறது. இது போல மேலும் சில பாடல்கள் உன் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. எல்லாரின் விருப்பமான 'அந்திமழை பொழிகிறது' 'இது ஒரு பொன்மாலைப்பொழுது' போன்ற பாடல்கள் உனக்கும் பிடிக்கும் என்றாலும், உனக்கென்று சில பாடல்கள் உள்ளத்து ஆழத்தில் அமிழ்ந்திருக்கின்றன. அவற்றை எங்கு கேட்டாலும் உனக்குள் சில ரசாயன மாறுதல்கள்..

வெள்ளைப்புறா ஒன்று - என்ற பாடல் உனக்கு சின்னவயதில் annual leaveன்போது விழுப்புரம் சென்ற நினைவை கிளறும். கூடவே அங்கு முதல்முதலாக குடித்த rosemilk சுவையும் ஞாபகத்துக்கு வரும். அங்கு இந்தப்பாட்டை அத்தனை தடவை கேட்டிருக்கிறாய்.
காதல் ரோஜாவே - பாட்டை கேட்டால் +1ல் இந்த பாட்டின் தாக்கம் ஏற்பட்ட நினைவு வரும். அதுவரை கேட்டிராத வித்தியாசத்தை ரஹ்மான் இந்தப்பாடலில் கொடுத்திருந்தார். அதில் வரும் சோகம் உன்னை அப்போது ரொம்ப பாதித்ததாக நினைவு. பொதுவாகவே உனக்கு சோகத்தை மெலடியில் இழைத்த பாடல்கள் பிடித்திருந்தன. பூங்காற்றிலே உன் சுவாசத்தை - போன்ற பாடல்களில் ரஹ்மான் தனது மற்ற பாடல்களில் வாரி இறைத்த இரைச்சல்களுக்காக பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டார். இதோ, இப்போது நம் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் 'செனோரிடா' பாடல்கூட உன்னை time machineல் ஏற்றி எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறது.. அட..

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்