எழுத்தாளர் Syndrome
1) பாதிக்கும் மேலாக எப்.எம்.ரேடியோ போல சகலதரப்புச் செய்திகளையும் எழுதித் தள்ளுகிறார்கள்
உங்களுக்குப் புரியவேயில்லையா? தமிழோவியம் ஆட்கள் சரியாக சொல்லித்தரவில்லையா? வலைப்பதிவு ஒருவரது அற்புதமான படைப்புக்களை உலகுக்கு வழங்க அல்ல. ஒரு தனிமனிதன் தன்னை பாதித்த, தோன்றிய எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுத. Blog is a frequent, chronological publication of personal thoughts and Web links.
2) நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு துளியும் சிரிப்புவரவிடாமல் எழுதும் கலையில் பலரும் விற்பன்னராகயிருக்கிறார்கள்.
நிறைய விஷயங்கள் புரிவதற்கு context தெரியவேண்டும் அய்யா. நீங்க ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்துட்டு....
3) ஊர்கதை. சினிமா. லேசான சமூககோபம், கொஞ்சம் அக்கறை அத்தோடு பெரும்பாலும் வெட்டி அரட்டை நிரம்பியிருக்கிறது
அய்யய்யோ.. இதென்னடா வம்பாப்போச்சு. உங்க சொத்தையா அழிக்கறோம். ஏதோ bloggerல இடம் கொடுக்கறாங்க. எழுதறோம். நாங்கல்லாம் சாதாரண மனிதர்கள் சாமி. எங்களுக்கு பல விஷயங்கள்ல ஆர்வம் உண்டு. உங்களை மாதிரி எழுத்தாளர் முத்திரையைக் காப்பாத்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய தேதிக்கு தமிழ் இணையத்தில் வளர்ந்திருக்கிறது என்றால் அது பயனர்கள் ஒருவருக்கொருவர் கருத்து பறிமாற முடிவதால்தான். ஏன், அரட்டை அடித்தால் என்ன தப்பு? போனில் அரட்டை அடிக்கவில்லையா? இது புது மீடியம். அவ்வளவுதான்.
5) தமிழ் எழுத்தாளர்கள். வாசகர்கள் அனைவரது ஈமெயில் முகவரிகள் யாவையும் சேகரித்து ஒரு மெயில் ரைடக்டரி போடலாமே. (ஒருவேளை யாராவது செய்திருந்தால் அது எங்கே கிடைக்கிறது)
அப்படியெல்லாம் ஏதும் செய்யாமல் இருப்பதே நல்லது. எரிதர்கள் (spammers) கையில் அது கிடைத்தால் என்னவாகும் என்று நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.
6)கச்சாமுச்சா என்று பலரும் எழுதும் கட்டுரைகளிலிருந்து சிறந்த சிலவற்றைத் தேர்வு செய்து அதை தனியாக ஒரு பைண்டிங் போல லிங்க் அமைத்து தந்தால் நன்றாகயிருக்குமல்லவா?
உங்கள் பத்திரிகை உலக வழக்கங்களை இங்கு கொண்டுவராதீர்கள். இப்படி ஒருவர் தேர்வு செய்து கொடுத்தால் அது அவரது விருப்புவெறுப்புகளை நிச்சயம் பிரதிபலிக்கும். அவருக்கு சினிமா அலர்ஜி என்றால் சினிமா பற்றிய வலைப்பதிவுகள் ஒதுக்கப்படும். ஒன்று மட்டும் நிச்சயம். இணையத்து தமிழர்கள் பாதிப்பேருக்கு இந்த பைண்டிங் பயன்படாது.
8) கோபத்தில் பயன்படுத்துவதற்கென்ன தனியாக கொஞ்சம் பழமொழிகள் மற்றும் மிதமான கெட்டவார்த்தைகள்,சொலவடைகள், அர்த்தமற்ற ஒலிகள் போன்றவற்றை எனது பக்கத்தில் சேகரித்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.. மின்எழுத்தில் ரொம்பவும் நாகரீகமான சொற்களால் கோபபடுகிறார்கள், அல்லது அப்படி நடிக்கிறார்களா?
Netiquette என்றால் என்னவென்று தெரியுமா? படித்து தெரிந்துகொள்ளுங்கள். நேராக கோபப்படும்போது தோன்றுவதைவிட இணையத்தில் கோபப்படும்போது மறைமுகமான அர்த்தங்கள் தோன்ற வாய்ப்புண்டு. அதனால் அடக்கிவாசிப்பதே மேல்.
9) மின்பக்கங்களில் யார். எப்போது என்ன எழுதுவார்கள் என்று தீர்மானமாகத் தெரியாமலேயிருக்கிறது.
இனிமேல் உங்களிடம் சொல்லிவிட்டு எழுதுகிறேன். இதே தொழிலாக இருந்தால் வலைப்பதிவுகளை வார இதழாக மாற்றும் அளவுக்கு எழுதலாம். இல்லையே..
10) தமிழ் ஆர்வம் மிதமிஞ்சியிருக்கிறது. தமிழைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்.
இதைத்தான் முதலிலேயே சொன்னேன். மெனக்கெட்டு எழுதத்தெரியாவிட்டாலும் பொறுமையாக ஏன் எழுதுகிறோம் என்று நினைக்கிறீர்கள்?
"இந்த உலகத்தில். என்னையும் தங்களோடு சேர்த்துக்கொண்ட மின்எழுத்து சகாக்களுக்கு தீராத நன்றியும் வந்தனமும். "
நன்றியெல்லாம் எதுக்கு? யார் வேண்டுமானாலும் வரலாம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
எனக்கு இவர்களது பிரச்சினை என்னவென்று தெரிகிறது. புதிதாக நுழைந்த களத்தில் ஏற்கனவே எக்கச்சக்கமான பேர் இருப்பதால் எழுத்துலகில் தங்களது உயர்வை சுட்டிக்காட்ட தோன்றுகிறது. தேவையேயில்லை. நீங்கள் எப்போதும்போல் நன்றாகவே எழுதுவீர்கள். உங்கள் எழுத்துக்கு நிறையபேர் வருவார்கள். ஆனால் இலக்கியத்தையும் கதைகளையும் தவிர தமிழுக்கு வேறு உபயோகங்களும் உண்டு என்று நம்புபவர்கள் வேறு உலகத்தில் இருக்கவே விரும்புவார்கள்.




