மெக்கின்ஸியும் இந்தியாவும் - 1
நிறைய பேரைப்போல் நானும் ஆந்திரா CEO சந்திரபாபு நாயுடு தேர்தலில் வெற்றிபெறாதது குறித்து அதிருப்தி அடைந்தவன்தான் (நம்ம இதயத்துக்கு நெருக்கமான ITக்கு நிறைய செஞ்சவராச்சே!). ஆனாலும் விவசாயிகளின் தற்கொலை பிரச்சினை தீர்க்கப்படாததும் உறுத்திக்கொண்டே இருந்தது. இன்று ஒரு கட்டுரையைப்படிக்க நேர்ந்தது. London Guardian பத்திரிகை கட்டுரையாளர் ஜார்ஜ் மான்பயாட் எழுதியது (Siliconeer இதழில் மறுபதிப்பு). அதில் அவர் நாயுடுவின் Vision 2020 ஆந்திராவை முன்னேற்றுவதற்கு மாறாக உருக்குலைத்திருக்கும் என்கிறார்.
அமெரிக்க நிறுவனமான மெக்கின்ஸி தயாரித்த இந்த ஆவணம் துவக்கத்தில் ஒன்றும், உள்ளே ஆழ்ந்து போகையில் மற்றொன்றும் சொல்வதாக இவர் குற்றம் சாட்டுகிறார். உதாரணத்துக்கு முதலில் கல்வியும் ஆரோக்கியமும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்றும், போகப்போக அரசு மருத்துவமனைகளும் பல்கலைக்கழகங்களும் தனியார்மயமாக்கப்படவேண்டும் என்று முரண்பாடாக உள்ளதாம். (Vision 2020ஐ நானே படித்துவிட்டு இது உண்மையா என்று கூறுகிறேன்). என்னைப்பொறுத்தவரை இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இவை இரண்டும் கண்டிப்பாக அரசாங்கத்தின் கையிலும் இருக்கவேண்டும். இல்லையேல் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளவர்கள் இவற்றை உபயோகிக்க வசதி இன்றி தவிக்க நேரிடும். மேலும் தொழில்துறை வளர 20 மில்லியன் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படவும் பரிந்துரைத்துள்ளதாம். ஏற்கனவே உணவின்றி தற்கொலை செய்துகொள்ளும் ஆந்திர விவசாயிகளின் நிலை என்னவாகும் என்று யோசியுங்கள். ஆனால், இலவச மின்சாரம் கொடுக்கவேண்டுமா கூடாதா என்பது பற்றி எனக்கு ஒரு தெளிவான நிலை இல்லை. உங்கள் கருத்து என்ன? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
Vision 2020க்கு பிரிட்டன் நிதியுதவி அளிப்பது குறித்தும் இந்தக்கட்டுரை அதிருப்தி காட்டுகிறது. இது இந்தியாவில் பிரிட்டனின் வணிக முதலைகள் வலை விரிப்பதற்கான சூழ்ச்சி என்கிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியுடன் Formula one raceஐ ஆந்திராவுக்கு கொண்டுவர நாயுடு முயற்சித்தது நினைவிருக்கலாம். ஆனால், ஆந்திர கேபினட் மீட்டிங் ஒன்றின் minutes வெளியே கசிந்ததில் தெரியவந்த ரகசியம் - Formula oneக்கு அரசாங்கம் 600 கோடி ரூபாய் மானியம் வழங்கவேண்டும் என்று மெக்கின்ஸி பரிந்துரைத்ததாம். இலவச மின்சாரத்தைவிட Formula one ஒன்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றவில்லை. மேலும் புகையிலை விளம்பரங்கள் மீதான தடையை Formula oneக்கு மட்டும் விலக்க முயற்சி நடந்ததாம். நல்லவேளை, இவையெல்லாம் அரங்கேறுவதற்குள் நாயுடுவை இறக்கிவிட்டார்கள் புத்திசாலி இந்தியர்கள் என்று முடிகிறது இந்தக்கட்டுரை. நாயுடுவுக்கு இதிலெல்லாம் என்ன பங்கு என்று சரியாக தெரியவில்லை - வெறும் பலியாடா இல்லை பூசாரியா??
(தொடரும்..)
அமெரிக்க நிறுவனமான மெக்கின்ஸி தயாரித்த இந்த ஆவணம் துவக்கத்தில் ஒன்றும், உள்ளே ஆழ்ந்து போகையில் மற்றொன்றும் சொல்வதாக இவர் குற்றம் சாட்டுகிறார். உதாரணத்துக்கு முதலில் கல்வியும் ஆரோக்கியமும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்றும், போகப்போக அரசு மருத்துவமனைகளும் பல்கலைக்கழகங்களும் தனியார்மயமாக்கப்படவேண்டும் என்று முரண்பாடாக உள்ளதாம். (Vision 2020ஐ நானே படித்துவிட்டு இது உண்மையா என்று கூறுகிறேன்). என்னைப்பொறுத்தவரை இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இவை இரண்டும் கண்டிப்பாக அரசாங்கத்தின் கையிலும் இருக்கவேண்டும். இல்லையேல் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளவர்கள் இவற்றை உபயோகிக்க வசதி இன்றி தவிக்க நேரிடும். மேலும் தொழில்துறை வளர 20 மில்லியன் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படவும் பரிந்துரைத்துள்ளதாம். ஏற்கனவே உணவின்றி தற்கொலை செய்துகொள்ளும் ஆந்திர விவசாயிகளின் நிலை என்னவாகும் என்று யோசியுங்கள். ஆனால், இலவச மின்சாரம் கொடுக்கவேண்டுமா கூடாதா என்பது பற்றி எனக்கு ஒரு தெளிவான நிலை இல்லை. உங்கள் கருத்து என்ன? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
Vision 2020க்கு பிரிட்டன் நிதியுதவி அளிப்பது குறித்தும் இந்தக்கட்டுரை அதிருப்தி காட்டுகிறது. இது இந்தியாவில் பிரிட்டனின் வணிக முதலைகள் வலை விரிப்பதற்கான சூழ்ச்சி என்கிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியுடன் Formula one raceஐ ஆந்திராவுக்கு கொண்டுவர நாயுடு முயற்சித்தது நினைவிருக்கலாம். ஆனால், ஆந்திர கேபினட் மீட்டிங் ஒன்றின் minutes வெளியே கசிந்ததில் தெரியவந்த ரகசியம் - Formula oneக்கு அரசாங்கம் 600 கோடி ரூபாய் மானியம் வழங்கவேண்டும் என்று மெக்கின்ஸி பரிந்துரைத்ததாம். இலவச மின்சாரத்தைவிட Formula one ஒன்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றவில்லை. மேலும் புகையிலை விளம்பரங்கள் மீதான தடையை Formula oneக்கு மட்டும் விலக்க முயற்சி நடந்ததாம். நல்லவேளை, இவையெல்லாம் அரங்கேறுவதற்குள் நாயுடுவை இறக்கிவிட்டார்கள் புத்திசாலி இந்தியர்கள் என்று முடிகிறது இந்தக்கட்டுரை. நாயுடுவுக்கு இதிலெல்லாம் என்ன பங்கு என்று சரியாக தெரியவில்லை - வெறும் பலியாடா இல்லை பூசாரியா??
(தொடரும்..)

