மட்டுறுத்தல் நண்பன் பற்றிய சந்தேகத்துக்கான விளக்கம்
நண்பர் மகேந்திரன் அவர்களின் இந்த பதிவில் நான் இட்ட விளக்கத்தை இங்கு அனைவரும் அறியும்படி அளிக்கிறேன். இந்தமாதிரி சந்தேகங்கள் உங்களில் யார் மனதில் இருந்தாலும் அதைப்போக்க இது உதவும்.
மகேந்திரன்,
உங்கள் பதிவில் டுபாக்கூர் என்பவர் இட்டுள்ள பின்னூட்டத்தில் 'மட்டுறுத்தல் நண்பன்' செயலியைப்பற்றி சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருப்பதால் இந்த மடல்.
என்மேல் நம்பிக்கை இல்லாவிட்டால், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டு திரட்டிகளிலும் எனது மென்பொருளுக்கு சுட்டி கொடுத்திருப்பார்களா என்று யோசித்துப்பாருங்கள். நான் 'மட்டுறுத்தல் நண்பனை' விளக்கிய இந்த பதிவில் சிகப்பு கலரில் நன்றாக தெரியும்படி என்ன சொல்லியிருக்கிறேன் என்று பாருங்கள்.
"ஒரு புது ஜிமெயில் கணக்கை உருவாக்கி அதை பின்னூட்டங்களுக்காக மட்டும் என்று ஒதுக்கிவிடுங்கள்...ஏற்கனவே மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கை இந்த செயலியுடன் பயன்படுத்தவேண்டாம்."
அதாவது நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் ஜிமெயில் முகவரியில் பின்னூட்டங்களைத்தவிர வேறெதுவும் இருக்காது. அதை வைத்துக்கொண்டு என்னால் யாரையும் எதுவும் செய்யமுடியாது. அதிலும் அவர் சொல்லும்படி உங்கள் ப்ளாக்கர் கணக்கை எல்லாம் தொடக்கூடிய முடியாது என்பது சின்னக்குழந்தைக்கு கூட புரியும். நீங்கள் ப்ளாக்கர் கணக்குக்கு பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லையே இதற்கும் பயன்படுத்தக்கூடாது என்பதை நான் சொல்லித்தரத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது வலையுலாவுதலில் முதல் பாடம்.
நீங்கள் தரும் கடவுச்சொல் உங்கள் பின்னூட்டங்களைப்பார்த்து ஆலோசனைகள் அளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அன்னியலோகத்தில் எங்கும் சேமிக்கப்படுவதில்லை. தேன்கூட்டில் எவ்வாறு ஒரு கடவுச்சொல் அளித்து நுழைகிறீர்களோ அது போலத்தான்.
கூகிளில் "Ramani Arunachalam AID" என்று தேடிப்பாருங்கள். முதலில் தோன்றும் இந்த இரண்டு சுட்டிகளுக்கு சென்று பார்த்தால் 'Association for India's Development (AID)' என்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடும் லாபத்துக்கல்லாத அமைப்பில் நான் செகரடரியாகவும் பின்னர் பிரசிடென்டாகவும் பணியாற்றியது உங்களுக்கு தெரியவரும்.
இவற்றைப் பார்த்தபின் நான் எத்தகையவன் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம்.
அன்புடன்
வெங்கட்ரமணி
மகேந்திரன்,
உங்கள் பதிவில் டுபாக்கூர் என்பவர் இட்டுள்ள பின்னூட்டத்தில் 'மட்டுறுத்தல் நண்பன்' செயலியைப்பற்றி சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருப்பதால் இந்த மடல்.
என்மேல் நம்பிக்கை இல்லாவிட்டால், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டு திரட்டிகளிலும் எனது மென்பொருளுக்கு சுட்டி கொடுத்திருப்பார்களா என்று யோசித்துப்பாருங்கள். நான் 'மட்டுறுத்தல் நண்பனை' விளக்கிய இந்த பதிவில் சிகப்பு கலரில் நன்றாக தெரியும்படி என்ன சொல்லியிருக்கிறேன் என்று பாருங்கள்.
"ஒரு புது ஜிமெயில் கணக்கை உருவாக்கி அதை பின்னூட்டங்களுக்காக மட்டும் என்று ஒதுக்கிவிடுங்கள்...ஏற்கனவே மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கை இந்த செயலியுடன் பயன்படுத்தவேண்டாம்."
அதாவது நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் ஜிமெயில் முகவரியில் பின்னூட்டங்களைத்தவிர வேறெதுவும் இருக்காது. அதை வைத்துக்கொண்டு என்னால் யாரையும் எதுவும் செய்யமுடியாது. அதிலும் அவர் சொல்லும்படி உங்கள் ப்ளாக்கர் கணக்கை எல்லாம் தொடக்கூடிய முடியாது என்பது சின்னக்குழந்தைக்கு கூட புரியும். நீங்கள் ப்ளாக்கர் கணக்குக்கு பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லையே இதற்கும் பயன்படுத்தக்கூடாது என்பதை நான் சொல்லித்தரத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது வலையுலாவுதலில் முதல் பாடம்.
நீங்கள் தரும் கடவுச்சொல் உங்கள் பின்னூட்டங்களைப்பார்த்து ஆலோசனைகள் அளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அன்னியலோகத்தில் எங்கும் சேமிக்கப்படுவதில்லை. தேன்கூட்டில் எவ்வாறு ஒரு கடவுச்சொல் அளித்து நுழைகிறீர்களோ அது போலத்தான்.
கூகிளில் "Ramani Arunachalam AID" என்று தேடிப்பாருங்கள். முதலில் தோன்றும் இந்த இரண்டு சுட்டிகளுக்கு சென்று பார்த்தால் 'Association for India's Development (AID)' என்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடும் லாபத்துக்கல்லாத அமைப்பில் நான் செகரடரியாகவும் பின்னர் பிரசிடென்டாகவும் பணியாற்றியது உங்களுக்கு தெரியவரும்.
இவற்றைப் பார்த்தபின் நான் எத்தகையவன் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம்.
அன்புடன்
வெங்கட்ரமணி


comments so far.
<< Home